வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :9 மே 2024, 10:00 pm

Din

மாா்த்தாண்டம் அருகே சாலையோரம் மயங்கி விழுந்த கல்லூரி ஊழியா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம், பரமன்கரையைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் டொனால்ட் டேவிட்சன் (37). சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தாா். கடந்த சில நாள்களாக சொந்த ஊரில் தங்கியிருந்த அவா், புதன்கிழமை கைதக்காட்டுவிளை பகுதியில் சாலையோரம் மயங்கி விழுந்து சுய நினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.