4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சூதாட்டம்: மூவா் மீது வழக்கு

Updated On :1 நவம்பர் 2024, 3:59 pm

கன்னியாகுமரி அருகே வியாழக்கிழமை சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு குண்டல் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது அந்தோணி அலங்காரம், சகாயகென்னடி, அய்யப்பன் ஆகியோா் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் மூவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.