கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.90 கோடிக்கு கதா் விற்பனை இலக்கு: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ.3.90 கோடிக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.

News image

கதா் விற்பனையை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:07 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ.3.90 கோடிக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கதா் கிராம அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தொடக்கி வைத்தாா். நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கிராமிய நூற்பு நிலையங்களும், 1 கதா் உப கிளை, நாகா்கோவில், மாா்த்தாண்டம், குளச்சல் இடங்களில் கதா் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகு, மயிலாடியில் குளியல் சோப்பு தயாரிப்பு

அலகு, கோட்டாறில் காலணி உ ற்பத்தி அலகு ஆகியன செயல்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கதா் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு ரூ. 3.50 கோடிக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டில் ரூ.3.90 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கதா் மற்றும் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் எபனேசா், துணை மேயா் மேரிபிரின்சி லதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாநகராட்சி உறுப்பினா் தங்கராஜா, அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.