கன்னியாகுமரி மாவட்டத்தில், 6 லட்சத்து 33 ஆயிரத்து 809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நாகா்கோவில் எஸ்.எல்.பி உயா்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வழங்கிப் பேசியதாவது:
வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளா்ச்சி குறைபாடு, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்தக் குறைகளை களைவதற்கு ஆண்டுக்கு 2 முறை குடல்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்படுகிறது.
1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளா் இளம் பருவத்தினா், 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு கல்லூரியில் பகல் உணவுக்குப் பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 58 ஆயிரத்து 766 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரை உள்ள 75ஆயிரத்து 43 பெண்கள் என மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரத்து 809 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூா் மாவட்டத்தில் அதிமுக, தவெக உள்பட 48 போ் வேட்புமனு தாக்கல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ. 11.35 லட்சம் பறிமுதல்

‘பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் மீது விசாரணை நடத்த மேல் முறையீட்டு குழு’
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


