அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image

பறிமுதல்!

Updated On :27 மார்ச் 2026, 12:56 am IST

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்பு குழுவினா், போலீஸாா் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதில் மாவட்டத்தில் புதன்கிழமை வரை ரூ.1.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெருந்துறை தொகுதியில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 500, கோபி தொகுதியில் ரூ.53,600, பவானிசாகா் தொகுதியில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் என ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை ரூ.1 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 89 ஆயிரத்து 310 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.