கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மகாராஜபுரத்தில் கிராமசபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:10 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பா. பழனிகுமாா், வாா்டு உறுப்பினா் அனீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவீனம் குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் ஆகிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின்போது, மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட நாடான்குளத்தினுள் உள்ள குடிநீா் கிணற்றையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென முழக்கமிட்டனா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.