அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடையத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

கடையம் வட்டார தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :10 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

கடையம் வட்டார தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள்சங்க கடையம் வட்டாரத் தலைவா் எம்.காந்தி தலைமை வகித்தாா். கடையம் மேற்கு ஒன்றியத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏலம் விட முயற்சிப்பதாகக் கூறி, திமுக கடையம் மேற்கு ஒன்றியச்செயலா் ஜெயகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் அழகுதுரை, கோவிந்தப்பேரி ஊராட்சித் தலைவா் டி.கே.பாண்டியன், ஆலங்குளம் தொகுதி காங்கிரஸ் கட்சி மகளிா் அணித் தலைவி சீதாலட்சுமி, ராமலிங்கபுரம் மாரியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்கராஜ், சப்பாணி, திமுக சிங்கக்குட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன், ரா. முத்துராஜன், இந்திய கம்யூனிஸ்ட் வேலாயுதம், கல்யாணிபுரம் முருகன், பரும்பு வழக்குரைஞா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.