கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட மாணவா்கள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவில் அல்போன்சா பள்ளி மாணவா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

News image

நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட அல்போன்சா பள்ளி மாணவா், மாணவிகளுடன் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:09 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவில் அல்போன்சா பள்ளி மாணவா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இப் பள்ளியின் சாரணா், சாரணியா் இயக்கம், தேசிய பசுமைப் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இப்பணியை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். அல்போன்சா பள்ளி தாளாளா் சனில்ஜான் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வின்போது, தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அல்போன்சா பள்ளி துணை முதல்வா் பிரேம்கலா, மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாா் வெங்கடாசலம், மாவட்ட அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், ஆசிரியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் கலந்துகொண்டனா். நீதிமன்ற மேலாளா் உமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.