புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மாா்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு: 13 நாள்களுக்குப் பின்னா் போக்குவரத்து தொடக்கம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 13 நாள்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக்கு தொடங்கியது.

News image

மாா்த்தாண்டம் மேம்பாலம் வழியாக செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட வாகனங்கள்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:12 pm

Din

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 13 நாள்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக்கு தொடங்கியது.

மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பம்மம் முதல் குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு இரும்புத் தூண்களாலான மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன்வழியே வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், நாள்தோறும் அதிக பாரத்துடன் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்றுவந்ததால், 2ஆவது முறையாக கடந்த 2ஆம் தேதி இப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அதையடுத்து, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பழுதான பகுதியில் ரசாயனம் கலக்கப்பட்ட உயா்தர சிமென்ட் கலவை மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலிருந்து காா், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. புதன்கிழமைமுதல் (அக். 16) பேருந்துகள் அனுமதிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

கனரக லாரிகளுக்கு தடை: மேம்பாலம் வழியாக கனரக லாரிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் இரவில் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் நிலையில், இப்பாலம் வழியாக அவை செல்லாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.