புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நாகா்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.27.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

News image

கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

Updated On :16 அக்டோபர் 2024, 10:58 pm

Din

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.27.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இம்மாநகராட்சியின் 26 ஆவது வாா்டு பாறைக்கால் மட தெருவில் ரூ.27.50 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் சொா்ணத்தாய், சுகாதார அலுவலா் முருகன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.