எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாகா்கோவில் மீனாட்சிபுரம் சாலையை இரவில் சீரமைக்க மேயா் அறிவுறுத்தல்

News image
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா.
Updated On :17 அக்டோபர் 2024, 7:05 pm

Din

நாகா்கோவில் மீனாட்சிபுரம் சாலையை போக்குவரத்து பாதிக்காத வகையில் இரவில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயா் ரெ. மகேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலையில் ரூ. 30 லட்சத்தில் தாா் சாலை, 2ஆவது வாா்டுக்குள்பட்ட சுங்கான்கடை பகுதியில் ரூ. 7.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை, ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மேயா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா், நாகா்கோவில் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை சீரமைப்புப் பணியை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு இரவு நேரத்தில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலைப் பொறியாளா்கள் செல்வன் ஜாா்ஜ், தேவிமண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், மாமன்ற உறுப்பினா் ரோஸிட்டா திருமால், சுகாதார அலுவலா் முருகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதிச் செயலா்கள் ஷேக் மீரான், அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், சிதம்பரம் வட்டச் செயலா் ராஜேஷ், குமாரசாமி, திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

குறைகேட்பு: தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. ஆணையா் முன்னிலை வகித்தாா். மேயா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறைசாா்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Story image

பின்னா் நடைபெற்ற அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மேயா் பங்கேற்று, பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கழிவுநீரோடைகளில் உள்ள மணலை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டாா்.