ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி மோசடி புகாா்: காவல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி மோசடி புகாா்...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:23 pm

Din

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மீது கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஏசுராஜசேகரன். இவா், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றியபோது, 30-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, பெண் ஒருவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் விசாரித்து, ஏசுராஜசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், ஏசுராஜசேகரன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.