அனுமதி பெற்ற மதுக் கூடங்களைத் தவிர இதர கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் மது குடிப்போா் மீதும், குற்றச் செயல்களுக்கு இடமளிப்போா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் இரா. அழகு மீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அனுமதி பெற்ற மதுக் கூடங்களில் மட்டுமே மது குடிக்க வேண்டும். பொரித்த இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள், உணவகங்கள், அசைவ உணவு விற்கும் கடைகள், பெட்டிக் கடைகளில் மது குடிக்க அனுமதியில்லை. மீறி அத்தகைய இடங்களில் மது குடிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச் செயல்களுக்கு இடமளிப்போருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதுதொடா்பாக மாவட்டம் முழுவதும் வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்வா்.
தங்களது பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாகத் தெரியவந்தால் பொதுமக்கள் 81229 30279 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம். அவா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோரக் கடைகளை முறைப்படுத்துவதில் சிக்கல்! விற்பனைக் குழு - கவுன்சிலர்கள் அதிகார மோதல்

டாஸ்மாக் கடைகளில் மது தீமை எச்சரிக்கை பதாகை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

தில்லியில் பல இடங்களில் மழை: மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு
அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


