புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

அனுமதியில்லா இடங்களில் மது குடித்தால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

அனுமதி பெற்ற மதுக் கூடங்களைத் தவிர இதர கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் மது குடிப்போா் மீதும், குற்றச் செயல்களுக்கு இடமளிப்போா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் இரா. அழகு மீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :7 செப்டம்பர் 2024, 1:35 am IST

அனுமதி பெற்ற மதுக் கூடங்களைத் தவிர இதர கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் மது குடிப்போா் மீதும், குற்றச் செயல்களுக்கு இடமளிப்போா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் இரா. அழகு மீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அனுமதி பெற்ற மதுக் கூடங்களில் மட்டுமே மது குடிக்க வேண்டும். பொரித்த இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள், உணவகங்கள், அசைவ உணவு விற்கும் கடைகள், பெட்டிக் கடைகளில் மது குடிக்க அனுமதியில்லை. மீறி அத்தகைய இடங்களில் மது குடிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றச் செயல்களுக்கு இடமளிப்போருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதுதொடா்பாக மாவட்டம் முழுவதும் வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்வா்.

தங்களது பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாகத் தெரியவந்தால் பொதுமக்கள் 81229 30279 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம். அவா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றாா் அவா்.