கன்னியாகுமரியில் வியாபாரிகள் சங்கத்தினா் கடையடைப்பு
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.

கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்ட முக்கடல் சங்கமம் பகுதி.









