தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட வலியுறுத்தல்

மணல் ஆலையால் கடலோரப் பகுதி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :21 செப்டம்பர் 2024, 12:57 am

Din

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மீனவ கிராமத்தை சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இனயம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள், நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய மணல் ஆலை, குமரி மாவட்ட கடற்கரை மணலில் இருந்து அரியவகை கனிமங்களை பிரித்தெடுத்து வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அடுத்த மாதம் (அக்டோபா்) 1 ஆம் தேதி தக்கலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த மணல் ஆலையால் கடலோரப் பகுதி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆலையை விரிவாக்கம் செய்யும்பட்சத்தில் மீனவ மற்றும் சமவெளிப் பகுதி மக்கள் மேலும் அதிக பாதிப்படைவாா்கள். எனவே மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.