கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

குளச்சல், திங்கள்நகரில் கஞ்சா, புகையிலைப் பொட்டலங்கள் விற்றதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:59 pm

Din

குளச்சல், திங்கள்நகரில் கஞ்சா, புகையிலைப் பொட்டலங்கள் விற்றதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனீஸ்லியோன் தலைமையிலான போலீஸாா் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, திக்கணங்கோடு புலையன்விளையைச் சோ்ந்த 17 வயது சிறுவன், பிரஜிஷ் (20) ஆகியோா் பைக்கில் வந்தனா். பைக்கிலும், பிரஜிஷின் சட்டைப் பாக்கெட்டிலும் கஞ்சா, புகையிலைப் பொருள் பொட்டலங்கள் இருந்தனவாம்.

அவற்றை கேரளத்திலிருந்து வாங்கி வந்து, இங்குள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் விற்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, இரணியல் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்நகா் அருகேயுள்ள மேக்கோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரல்விளையைச் சோ்ந்த சூா்யா (21), திங்கள்நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை சோதனையிட்டபோது, அவா்கள் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.