ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

பேருந்து நடத்துநா் வைத்திருந்த பயணச்சீட்டுகள் மாயம்

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

குலசேகரம் அருகே ஓடும் பேருந்தில் நடத்துநா் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பயணச்சீட்டுகள் மாயமானதாக புகாா் செய்யப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டத்திலிருந்து தடம் எண் 89 எம் பேருந்து கோதையாறு நோக்கி சனிக்கிழமை மாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் தற்காலிக நடத்துநா் பணியில் இருந்தாா். இந்தப் பேருந்தில் இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

அதே வேளையில் மகளிா் இலவச பயணச்சீட்டுகள் உள்பட ரூ. 30,130 மதிப்பிலான பயணச்சீட்டுகளை, பயணச்சீட்டு பலகையுடன் ஒரு பையில் வைத்து, தனது இருக்கையின் கீழே வைத்திருந்தாா் நடத்துநா். பேச்சிப்பாறை அருகே சீரோ பாயின்ட் சந்திப்பு பகுதிக்கு பேருந்து சென்றபோது அந்தப் பையை காணவில்லை.

இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.