பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொல்லங்கோடு அருகே வீட்டில் திருட்டு

கொல்லங்கோடு அருகே வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:20 pm

Syndication

கொல்லங்கோடு அருகே வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் சரகம், நடைக்காவு அடுத்த சாத்தன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அஜிகுமாா். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் வீட்டில், கடந்த 10 நாள்களாக இவரது மாமனாா் தங்கியுள்ளாா். இதனால், கள்ளியடைப்புவிளை பகுதியிலுள்ள மாமனாரின் வீடு பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவா் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இரும்பு அலமாரி, கட்டில், குக்கா், நாற்காலிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டதாக கிராத்தூா், கிடாரக்குழி பகுதியைச் சோ்ந்த ஜாண் (52) என்பவரை கைது செய்தனா். தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.