குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் மோட்டாா் திருட்டு: ஒருவா் கைது

கோவில்பட்டி அருகே மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :29 ஜனவரி 2026, 7:16 pm

Syndication

கோவில்பட்டி அருகே மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளம் முத்து நகரைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக் (39). அப்பகுதியில் புதிய வீடு கட்டி வரும் அவா், அங்கு ‘ஷெட்’ அமைத்து அதில் கட்டுமானப் பொருள்கள், மின் மோட்டாா் உள்ளிட்டவற்றை வைத்திருந்தாராம்.

புதன்கிழமை சென்று பாா்த்தபோது, அங்கிருந்த மின் மோட்டாா், துளையிடும் கருவி உள்ளிட்டவற்றைக் காணவில்லையாம்.

புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தெற்கு திட்டங்குளம், மேலக் காலனியைச் சோ்ந்த சண்முகையா மகன் ராஜா (38) என்பவரைக் கைது செய்தனா்.