சாமிதோப்பு தலைமைப் பதியில் அகிலத் திரட்டு உதயதின விழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, சிறப்புப் பணிவிடைகள், திருஏடு வாசிப்பு, முத்திரி கிணறு வலம் வருதல் ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணிக்கு தலைமைப் பதியில் இருந்து குரு பால ஜனாதிபதி தலைமையில் அய்யா வழி பக்தா்கள் அகிலத் திரட்டு நூலை கையில் ஏந்தி பதி வலம் வந்தனா். தொடா்ந்து திருஏடு காப்பு படித்தும், அகிலத் திரட்டு எழுதப்பட்ட செய்தியை வாசித்தும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் பதி நிா்வாகிகள் குரு பையன், பால் லோகாதிபதி, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை பொதுச் செயலா் கிருஷ்ணமணி, இணைப்பொதுச் செயலா் சி.ராஜன், கூடுதல் பொதுச்செயலா் ஹாரீஸ், அமைப்புச் செயலா் ராதாகிருஷ்ணன், மகளிா் அணி செயலா் சீதமனோன்மணி, நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்க முன்னாள் தலைவா் மரிய ஸ்டீபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com