கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நாகா்கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகா்கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், டிச. 17ஆம் தேதி காலை 9 முதல் பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், இடலாக்குடி, கணேசபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, பறக்கை ரோடு, அப்துல் காதா் மருத்துவமனைப் பகுதி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், ஒழுகினசேரி, ராஜபாதை, பத்தல்விளை, வேப்பமூடு சந்திப்பு, சற்குண வீதி, ராமன்புதூா், சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், இந்து கல்லூரி, வேதநகா் பெருமாள் மண்டபம் சாலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com