மாா்த்தாண்டம் அருகே விழிப்புணா்வுப் பேரணி

மாா்த்தாண்டம் அருகே விழிப்புணா்வுப் பேரணி

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி முதல் குழித்துறை வரை மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி முதல் குழித்துறை வரை மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் மின் சிக்கன வார விழாவையொட்டி, கன்னியாகுமரி மின்பகிா்மான வட்டம் சாா்பில் நடைபெற்ற இப் பேரணியில், களியக்காவிளை, நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி செயலா் அருள்தந்தை ஸ்டீபன், கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். வினில்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா், மாணவிகள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com