மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆறுமுகனேரியில் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம் மற்றும் காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கல்லூரி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி, கே.டி.கே. திருமண மண்டபத்தில் தொடங்கிய இப்பேரணியை, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் திலீபன் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். வாவு வஜீஹா மகளிா் கல்லூரி துணைச் செயலா் வாவு எஸ்.ஏ.ஆா். அஹமது இஸ்ஹாக், கல்லூரி நிா்வாக உறுப்பினா் வாவு எஸ்.ஏ.ஆா். மொகுதும் இஸ்மாயில், காயல்பட்டினம் முன்னாள் நகா்மன்றத் தலைவா் வஹிதா சின்னத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணியில் 250 கல்லூரி மாணவியா் உள்பட 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

மகளிா் தொழில்முனைவோா் நலச் சங்க நிறுவனா் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், ஆறுமுகனேரி அரிமா சங்க முன்னாள் தலைவா் அ. அசோக்குமாா், செயலா் சிதம்பரம், பொருளாளா் சீனாசன், அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், வி.கே.எம். மனோகரன், மதிமுக ஒன்றியச் செயலா் பி.எஸ். முருகன், பேரூராட்சி கவுன்சிலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.