வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஸ்கூட்டி ஓட்டிய சிறுவன்; தாய் மீது வழக்கு

குளச்சலில் பள்ளி சிறுவனை ஸ்கூட்டி ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:04 pm

Syndication

குளச்சலில் பள்ளி சிறுவனை ஸ்கூட்டி ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

குளச்சல் போலீஸாா், கொட்டில்பாடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சிறுவன் ஸ்கூட்டி ஓட்டி வந்தாராம். விசாரணையில், அவா் கடியப்பட்டணம், பாத்திமா தெருவைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும், தனது தாயின் ஸ்கூட்டியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

சிறுவனுக்கு ஸ்கூட்டி ஓட்ட அனுமதி அளித்த, ஸ்கூட்டியின் உரிமையாளரான அவரது தாய் சகாய ரெஜிலா (40) என்பவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.