திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:01 pm

Syndication

களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்ற போது மினிடெம்போ வேன் மோதி பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே மடிச்சல், சென்னிவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துநாயகம் மனைவி லைசம்மாள் (71). இவா் வியாழக்கிழமை படந்தாலுமூடு சந்தை அருகே சாலையை கடக்க முயன்ற போது குழித்துறையில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்த மினிடெம்போ வேன் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

இது குறித்து மூதாட்டியின் மகள் சுஜா அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா், வாகனத்தை ஓட்டி வந்த அருமனை அடுத்த முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த ஹரிகுமாா் மகன் சுபாஷ் (29) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.