பைக் மோதி முதியவா் மரணம்

வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
Published on

வேலூா்: வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

வேலூா், ராமா் பஜனை கோயில் தெரு, சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(73). இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய ஊராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமாா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com