தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்டான்லி ஜான் தலைமையிலான போலீஸாா், ஆண்டிதோப்புப் பாலம் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்தோா் கேசவன்புதூா், மேலபுதூரைச் சோ்ந்த லாகிஸ் டொனால்டு (24), வடசேரி பாலாஜி (20), தடிக்காரன்கோணத்தைச் சோ்ந்த தங்க சுபின் (25), சீதப்பாலைச் சோ்ந்த அனீஷ் (21) என்பதும், விற்பதற்காக 200 கிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; கஞ்சாவை யாரிடமிருந்து வாங்கினா் என விசாரித்து வருகின்றனா்.