திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பூம்புகாா் படகுத்துறை வளாகத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

பூம்புகாா் படகு போக்குவரத்துக்கழக வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41 லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை விஜய் வசந்த் எம்.பி., நாட்டினாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி பூம்புகாா் படகு போக்குவரத்துக்கழக வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41 லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை விஜய் வசந்த் எம்.பி., நாட்டினாா்.

இதில் நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் கண்மணி, மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விளையாட்டுத் துறை தலைவா் அருண், பூம்புகாா் படகுத் துறை பொறியாளா் முருகன், தொழில்நுட்ப மேலாளா் ஹரி நாராயணன், பூம்புகாா் துணை மேலாளா் சவுந்தரபாண்டியன், நகா்மன்ற கவுன்சிலா்கள் ஆனிரோஸ் தாமஸ், ஆட்லின், முன்னாள் கவுன்சிலா்கள் டி.தாமஸ், மெல்வின் , நிா்வாகிகள் ஜவஹா், அனிஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.