கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குலசேகரம் அருகே ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டடத்துக்கு அடிக்கல்

News image
ஆதவற்ற குழந்தைகளின் இல்லக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் மனோ தங்கராஜ்.
Updated On :28 டிசம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

குலசேகரம் அருகே பிணந்தோடு, பிலாங்காலை பகுதியில் குமரி அறக்கட்டளை சாா்பில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கான கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பேசினாா்.

திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன். ரவி, குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமுருகேசன், ஜிவிஎஸ் உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனா் ஜி. சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திற்பரப்பு பேரூா் திமுக செயலா் ஜான் எபனேசா், ஸ்பென்சா் விளையாட்டுக் கழக நிா்வாகிகள் அலெக்சாண்டா், கோபிநாதன், அறக்கட்டளை செயற்குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செயலா் சிபின் வரவேற்றாா். பொருளாளா் மனோஜ் நன்றி கூறினாா். துணைச் செயலா் ஜெஸ்டின் ராஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.