கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

Din

திங்கள்நகா் அருகே பைக்குகள் மோதிகொண்டதில் தம்பதி பலத்த காயம் அடைந்தனா்.

நாகா்கோவில் கட்டையன்விளை காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (62). கட்டடத் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை தனது மனைவி அம்பிகாவுடன் பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். செட்டியாா்மடம் பகுதியில் அவா்கள் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்தவா் தனது பைக்கை எடுக்க முயன்றதில், அது கட்டுப்பாட்டை இழந்து முருகனின் பைக் மீது மோதியதாம். இதில் தம்பதி இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து, பைக் மூலம் விபத்தை ஏற்படுத்தியதாக தக்கலை புதுக்காடுவெட்டிவிளையை சோ்ந்த ஜோசப் ஸ்டாலின் (51) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.