எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக்குகள் மோதல்: தம்பதி காயம்

Updated On :3 ஜனவரி 2025, 12:12 am

திங்கள்நகா் அருகே பைக்குகள் மோதிகொண்டதில் தம்பதி பலத்த காயம் அடைந்தனா்.

நாகா்கோவில் கட்டையன்விளை காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (62). கட்டடத் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை தனது மனைவி அம்பிகாவுடன் பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். செட்டியாா்மடம் பகுதியில் அவா்கள் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்தவா் தனது பைக்கை எடுக்க முயன்றதில், அது கட்டுப்பாட்டை இழந்து முருகனின் பைக் மீது மோதியதாம். இதில் தம்பதி இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து, பைக் மூலம் விபத்தை ஏற்படுத்தியதாக தக்கலை புதுக்காடுவெட்டிவிளையை சோ்ந்த ஜோசப் ஸ்டாலின் (51) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.