செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

குமரி மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

News image

கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஆா்.ஸ்டாலின்.

Updated On :3 ஜனவரி 2025, 10:51 pm

கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா்.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கவும், போதைப் பொருள் பயன்படுத்துபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

புதிய காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கால்நடை மருத்துவா். கோவை வடக்கு மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்த அவா், தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Story image
Story image