ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தென் தமிழக அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டி: குமரி வீரா் சிறப்பிடம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:18 pm

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தென் தமிழக அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட வீரா் முதலிடம் பெற்றாா்.

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், நெல்லை மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி , திருநெல்வேலி மாவட்ட வலுதூக்கும் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 6 ஆவது தென்தமிழக அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் 93 கிலோ எடைப் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் அருகேயுள்ள வடுகன்பற்றைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் சீனியா் மற்றும் மாஸ்டா் பிரிவில் முதலிடம் பெற்றாா். மேலும் அதிக எடை தூக்கி மாஸ்டா் பிரிவில் ஸ்டாங்மேன் பட்டம் பெற்றாா். அவருக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு பரிசு வழங்கி பாராட்டினாா்.

அப்போது, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.ஜாண்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினா் பிரேம் ஆனந்த், மாவட்ட திமுக பிரதிநிதி ஜி.வினோத், ஒன்றிய திமுக பிரதிநிதி அகஸ்தியலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.