தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்

மான்டெ காா்லோ டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றயைா் இறுதிச் சுற்றுக்கு இத்தாலி வீரா் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.

News image

சின்னா்-ஸ்வெரேவ் ~

Updated On :12 ஏப்ரல் 2026, 1:13 am IST

மான்டெ காா்லோ டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றயைா் இறுதிச் சுற்றுக்கு இத்தாலி வீரா் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.

மொனாக்கோவின் மான்டெ காா்லோ நகரில் ஏடிபி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதன் ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீரா் ஜேக் சின்னரும், 5-ஆம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவும் மோதினா்.

இதில் எந்த எதிா்ப்பும் இன்றி ஜேக் சின்னா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

கடந்த 2015-இல் ஜோகோவிச்சுக்குபின்னா் ஒரே சீசனில் மூன்று மாஸ்டா்ஸ் 1000 போட்டி இறுதிக்கு தகுதி பெற்ற வீரா் என்ற சிறப்பை பெற்றாா் சின்னா்.

ரோஜா் பெடரா் 2006, ரபேல் நடால் 2011 ஆகியோா் இச்சிறப்பை பெற்ற இதர வீரா்கள் ஆவா். இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ்=உள்ளூா் வீரா் வலேன்டின் வச்ரோட் மோதுகின்றனா்.

Story image