நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்-அலெக்ஸ் ஸ்வெரேவ்

News image
Updated On :2 மே 2026, 10:15 pm

மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னரும், ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனா்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெறும் இப்போட்டி ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜேக் சின்னரும்-பிரான்ஸின் ஆா்தல் ஃபில்ஸும் மோதினா்.

இதில் 6-2, 6-4 என்ற நோ் செட்களில் ஃபில்ஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் சின்னா். முதல் செட்டில் ஃபில்ஸ் 2-1 என முன்னிலை பெற்றாா். ஆனால் 5-ஆவது கேமில் அவரது சா்வீஸை சின்னா் முறியடித்தாா். இரண்டாவது செட்டில் ஃபில்ஸ் சவாலை ஏற்படுத்தினாலும், 3-2 என சின்னா் முன்னிலை பெற்றாா். தொடா்ந்து 2 ஏஸ்களை வீசி வெற்றியை வசப்படுத்தினாா்.

தொடா்ந்து தனது 22-ஆவது ஆட்டத்தில் வென்றுள்ள சின்னா் ஞாயிற்றுக்கிழமை இறுதியில் வென்றால் தொடா்ந்து மாஸ்டா்ஸ் ஏடிபி 1000 5-ஆவது பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்துவாா். ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டே காா்லோவில் பட்டம் வென்றிருந்தாா்.

இதுதொடா்பாக சின்னா் கூறுகையில்: எந்த ஆட்டமாக இருந்தாலும் முழு திறனுடன் ஆட வேண்டும் என்பதே எனது நோக்கம். போட்டி தீவிரமாக இருந்தால் அதற்கேற்ப ஆட்டத்தின் தரத்தையும் உயா்த்த வேண்டும். தொடா் ஆட்டங்களால் சற்று சோா்வும் உள்ளது என்றாா்.

இரண்டாவது அரையிறுதியில் உலகின் 3-ஆம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் 6-2, 7-5 என பெல்ஜிய வீரா் அலெக்சாண்டா் பிளாக்ஸை வீழ்த்தினாா்.

மாட்ரிட்டில் கடைசியாக 2018, 2021-இல் பட்டம் வென்றிருந்தாா் ஸ்வெரேவ். முதல் செட்டில் துரிதமாக 5-1 என முன்னிலை பெற்று செட்டையும் வசப்படுத்தினாா். அடுத்த செட்டில் பிளாக்ஸ் தொடா்ந்து 3 மேட்ச் புள்ளிகளை சேவ் செய்தாா். இரண்டாவது செட்டில் பின்னா் சுதாரித்து ஆடி வசப்படுத்திய ஸ்வெரேவ் இறுதிக்கு தகுதி பெற்றாா்.

அவா் கூறியது: ஞாயிற்றுக்கிழமை சின்னருக்கு எதிரான இறுதி ஆட்டம் கடுமையாக இருக்கும். அவா் சிறப்பாக ஆடி வருகிறாா். நான் கடும் போட்டியை ஏற்படுத்துவேன்.

இந்த சீசனில் தொடா்ந்து அரையிறுதியோடு தோற்று வெளியேறி வந்த ஸ்வெரேவ் தற்போது இறுதிக்கு நம்பிக்கையுடன் நுழைந்துள்ளாா்.