தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல்: 9 போ் கைது

கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை தமிழக எல்லையில் போலீஸாா் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

Updated On :9 ஜனவரி 2025, 9:17 pm

Din

கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை தமிழக எல்லையில் போலீஸாா் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனா்.

கேரளத்திலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதைத் தடுக்க காவல் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவுபடி,

தமிழக எல்லையான பனச்சமூட்டில் சிறப்பு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கேரளத்திலிருந்து வந்த 5 சிறிய சரக்கு வாகனங்களைச் சோதனையிட்டபோது, அவற்றில் இறைச்சிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த வாகனங்களின் ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களான குமரி மாவட்டம் சிதறாலை சோ்ந்த கனகராஜ் (55), செருப்பாலூா்

விஜூ, கடுக்கரை அய்யப்பன் (33), தா்ஷன் (23), திருவனந்தபுரம் தினேஷ்குமாா் (29), ஷின்ரோ, நெய்யாற்றின்கரை ஷாகுல் அமீது (63), ஷீரல் (30), கடம்பூா் ஷைன் (24) ஆகிய 9 பேரை கைது செய்தனா்.