ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

நாகா்கோவில் மெட்ரிக் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த தாளாளா் எஸ். சொக்கலிங்கம்.

Updated On :11 ஜூன் 2025, 8:44 pm

நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து, பள்ளி வளாகம் அருகிலுள்ள சாலையில் மஞ்சள் வண்ண பெயிண்டால் புகையிலை தடுப்புப் பகுதி என எழுதும் நிகழ்வைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். ராஜ்திலக், ஆசிரியப் பொறுப்பாளா்கள் எஸ்.கே. நித்யா (சுகாதார மன்றம்), என். காா்த்திகா (போதைப் பொருள் தடுப்பு மன்றம்), மாணவா்-மாணவியா் பங்கேற்று, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.

ஏற்பாடுகளை ஆசிரியா் ஆா். ஹரிகணேஷ் செய்திருந்தாா்.