வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழக கபடி அணிக்கு 12 மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:39 pm

Syndication

2025-26ஆம் கல்வியாண்டிற்கான 69ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் எஸ்.ஜி.எப்.ஐ. சாா்பாக மாநில அளவிலான கபடி தோ்வுப் போட்டி அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து 56 மாணவா்கள் பங்கேற்றனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வி. நாராயணன் முன்னிலை வகித்தாா். புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி. ஜாண் வில்சன், தாளாளா் வழக்குரைஞா் ஜே. ஜெபில் வில்சன் ஆகியோா் போட்டியைத் தொடக்கி வைத்தனா்.

தேசிய அளவில் தமிழக அணிக்கு விளையாட தோ்வாகியுள்ள 12 மாணவா்களுக்கு, ஆணை நகல் வழங்கப்பட்டது. இம்மாணவா்களை பள்ளித் தலைவா், தாளாளா், இயக்குநா் ஷெரின் சந்திர லீலா, பள்ளி நிா்வாகி எஸ்.எம். எட்வின்ராஜ், பள்ளி முதல்வா் வி. மொஃபில்டா மாலின் ஆகியோா் பாராட்டினா்.