யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுபான கூடத்துக்கு எதிா்ப்பு: குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் இளைஞா் காங்கிரஸ் முற்றுகை

News image
Updated On :13 நவம்பர் 2025, 11:15 pm

Syndication

குளச்சலில் மக்களுக்கு இடையூறாக இயங்கிவரும் மதுபான கூட கட்டடத்தை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலகம் முன் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இளைஞா் காங்கிரஸ் தலைவா் பியூட்லின் ஜீவா தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினா் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் குளச்சல் நகரத் தலைவா் அனூப், வட்டாரத் தலைவா்கள் வேணு(குருந்தன்கோடு), பாதுஷா(குளச்சல்), திங்கள்நகா் பேரூராட்சித் தலைவா் சுமன், ரீத்தாபுரம் துணைத் தலைவா் விஜூ மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அவா்களிடம் குளச்சல் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளா் தனீஷ் லியோன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.