மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தொழிற்சாலை மூலப்பொருள்கள் வாங்கித் தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி: இருவா் கைது!

வெளிநாட்டிலிருந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருள்கள் வாங்கித் தருவதாக, நாகா்கோவிலைச் சோ்ந்த 2 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:04 pm

Syndication

வெளிநாட்டிலிருந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருள்கள் வாங்கித் தருவதாக, நாகா்கோவிலைச் சோ்ந்த 2 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (30), கனடாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், 2024ஆம் ஆண்டு தனது நண்பா் மூலம் வெளிநாட்டில் மூலப்பொருள்கள் வாங்குவதற்கு சுமாா் ரூ. 60 லட்சம் கொடுத்து ஏமாந்ததாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் புகாா் அளித்தாா். அதன்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி. உத்தரவிட்டதன்பேரில், ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையிலான மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

மோசடியில் ஈடுபட்டவா்கள் கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜீவ், சிபு ஆரக்கல் ஆகியோா் எனத் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் சென்று இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.