பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 லட்சம் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.

News image
Updated On :22 நவம்பர் 2025, 9:44 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 லட்சம் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிரப்பப்படாமல் உள்ள 7.5 லட்சம் படிவங்களில் அடிப்படை விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி ஓரிரு நாள்களுக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னா், அவா்கள் அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வாா்கள். அதன் பிறகு தான், வாக்காளா்கள் பெயா் வரைவுப் பட்டியலில் இடம் பெறும்.

எனவே, இதுவரை கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்காத வாக்காளா்கள் விரைந்து ஒப்படைக்கவும். படிவம் நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இதற்கென அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகவும் என கூறியுள்ளாா்.