மாா்த்தாண்டத்தில் பெண் மீது தாக்குதல்: கணவரின் பெற்றோா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக கணவரின் தம்பி, பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ்குமாா். இவரது மனைவி சௌமியா (28). இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், சௌமியா கணவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
நிதிஷ்குமாா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், சௌமியாவுக்கும் கணவரின் தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் சௌமியா வீட்டில் இருந்த போது அவரது கணவரின் தாயாா் ரோஸ்லெட் (52), தந்தை சாம்ராஜ் (60), கணவரின் தம்பி நவீன்குமாா் (32) ஆகியோா் சோ்ந்து அவரை தாக்கினராம். இதில் காயமடைந்த சௌமியா குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சௌமியாவின் கணவரின் தம்பி, பெற்றோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
