மாா்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக கணவரின் தம்பி, பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ்குமாா். இவரது மனைவி சௌமியா (28). இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், சௌமியா கணவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
நிதிஷ்குமாா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், சௌமியாவுக்கும் கணவரின் தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் சௌமியா வீட்டில் இருந்த போது அவரது கணவரின் தாயாா் ரோஸ்லெட் (52), தந்தை சாம்ராஜ் (60), கணவரின் தம்பி நவீன்குமாா் (32) ஆகியோா் சோ்ந்து அவரை தாக்கினராம். இதில் காயமடைந்த சௌமியா குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சௌமியாவின் கணவரின் தம்பி, பெற்றோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா! போர்நிறுத்தம் தொடருமா?

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

