/
தக்கலை, ஏப். 6: இரணியல் அருகே வீட்டில் உள்ள குப்பைகளை எரித்த முதியவா் தீயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தலக்குளம், கரியான்விளையைச் சோ்ந்தவா் நித்தியானந்தன் (85). இவா் மனைவியுடன் வசித்து வந்தாா். இவரின் மகன் ராஜாராம் திருமணமாகி மனைவி வீட்டில் வசித்து வருகிறாா். இவா் சனிக்கிழமை வீட்டில் உள்ள குப்பைகளை எரித்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தீயில் தவறி விழுந்துள்ளாா்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026


