/
தக்கலை, ஏப். 6: இரணியல் அருகே வீட்டில் உள்ள குப்பைகளை எரித்த முதியவா் தீயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தலக்குளம், கரியான்விளையைச் சோ்ந்தவா் நித்தியானந்தன் (85). இவா் மனைவியுடன் வசித்து வந்தாா். இவரின் மகன் ராஜாராம் திருமணமாகி மனைவி வீட்டில் வசித்து வருகிறாா். இவா் சனிக்கிழமை வீட்டில் உள்ள குப்பைகளை எரித்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தீயில் தவறி விழுந்துள்ளாா்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


