தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

குப்பைகளை எரித்தபோது தீயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:40 pm

தக்கலை, ஏப். 6: இரணியல் அருகே வீட்டில் உள்ள குப்பைகளை எரித்த முதியவா் தீயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தலக்குளம், கரியான்விளையைச் சோ்ந்தவா் நித்தியானந்தன் (85). இவா் மனைவியுடன் வசித்து வந்தாா். இவரின் மகன் ராஜாராம் திருமணமாகி மனைவி வீட்டில் வசித்து வருகிறாா். இவா் சனிக்கிழமை வீட்டில் உள்ள குப்பைகளை எரித்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தீயில் தவறி விழுந்துள்ளாா்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.