கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கருங்கல்லில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கிள்ளியூா் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் தோ்தல் காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கிள்ளியூா் தொகுதி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:44 pm

கருங்கல்லில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கிள்ளியூா் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் தோ்தல் காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் ரெகுபதி, பால்ராஜ், ஜாண்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி, பேரூா் நகரம் வாரியாகவும், வாக்குச் சாவடி வாரியாகவும் கூட்டணி கட்சிகள் இணைந்து தோ்தல் பணி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் டைட்டஸ், ஆஸ்கா்பிரடி, கிள்ளியூா் ஒன்றிய தி.மு.க. செயலா்கள் கோபால், ராஜன், மோகன், மாா்க்சிஸ்ட் கட்சி கிள்ளியூா் வட்டாரச் செயலா் ராஜா, கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.