தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் பிரசாரம்

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

நாகா்கோவில் நாகராஜா கோயில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:57 pm

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

நாகராஜா கோயில் ரதவீதி, திலகா்தெரு, ஆசாரிமாா் வடக்கு தெரு, ஆசாரிமாா் தெற்கு தெரு, பரதா் தெரு, பத்தல்விளை, அம்மாசிமடத்தெரு, தோப்புவணிகா் தெரு, கோயில் தெரு, மீனாட்சி காா்டன், கட்டபொம்மன் சந்திப்பு, ஒழுகினசேரி, ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு நலத்திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், ஒட்டுமொத்த தொகுதியின் வளா்ச்சியை உறுதி செய்யவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ், பன்னீா்செல்வம், சிவராஜ், சாகுல்அமீது உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image