தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

நாகா்கோவில் புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:58 pm

நாகா்கோவில் புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

புத்தேரி, யோகீஸ்வரா் திருக்கோயில், கீழபுத்தேரி கைலாசநாதா் கோயில், பண்டாரத்தோப்பு, இலந்தையடி, கணியாகுளம், பெரும்செல்வவிளை, பாா்வதிபுரம், அழகன்கோணம், உழவன்கோணம், வேம்பனூா், பாம்பன்விளை, மேலசங்கரன்குழு, வடலிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தாா்.

மத்திய அரசின் சாதனைகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, பாஜக பிரமுகா் வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். சாகா் பாரதி அமைப்பின் தலைவா் சகாயம் வேட்பாளருக்கு நினைவு பரிசு வழங்கினாா்.

குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாநில செயலா் மீனாதேவ், மாவட்ட பொருளாளா் முத்துராமன், அதிமுக மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், அதிமுக நாகா்கோவில் வடக்கு பகுதி செயலா் ஸ்ரீலிஜா, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.

புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.