அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் பட்டமளிப்பு

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையா் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:29 am IST

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையா் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ் தலைமை வகித்தாா். நிதி பரிபாலகா் ஜியோ, பள்ளி முதல்வா் றசல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நெக்ஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பிரியா ஜெனிபா் வாழ்த்திப் பேசினாா். திருத்துவபுரம் மறைவட்ட முதல்வா் ஓய்சிலின் சேவியா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழலையா்களுக்குப் பட்டம் வழங்கி கௌரவித்தாா்.

மாணவா்களின் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.