மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:26 am IST

பத்மநாபபுரம் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தோட்டமலை, தச்சமலை, முடவன்பொற்றை, களப்பாறை, பின்னமூட்டுத்தேரி உள்ளிட்ட பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் வசிக்கும் பழங்குடி மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அணையில் இயக்கப்படும் படகில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அவரை பழங்குடி மக்கள் பழங்கள் உள்ளிட்டவை கொடுத்து வரவேற்றனா். அவா்களுக்கு நில உரிமை, மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக செல்லசுவாமி உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில், திமுக திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன், நிா்வாகிகள் அனஸ், ரமேஷ் கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலா் பொன்னுசாமி, தருமபுரி மாவட்டச் செயலா் என். மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், ஷாஜூ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.