வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். செல்லசுவாமி குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் பிரசாரத்தைத் தொடக்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:28 pm

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். செல்லசுவாமி குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பிலிருந்து தொடங்கி நாகக்கோடு, செருப்பாலூா், அரமன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டா் புஷ்பலீலா ஆல்பன், ஆா். லீமாரோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், குலசேகரம் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் எஸ்.ஆா். சேகா், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், செல்லசுவாமி கருப்புச் சட்டை அணிந்து பிரசாரம் மேற்கொண்டாா்.