தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே கட்டடத்தின் மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:21 pm

மாா்த்தாண்டம் அருகே கட்டடத்தின் மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜான் (59). கட்டடங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்த இவா், புதன்கிழமை பல்லன்விளை பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தின் மீது நின்று பணி செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அடையாளம் தெரியாதவா் சடலம்:

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் வியாழக்கிழமை கிடந்த சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை, மாா்த்தாண்டம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.