கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:37 pm

தக்கலை அருகே உள்ள மருதூா்குறிச்சியில் இளம்பெண் சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலையைச் சோ்ந்தவா் மோரிஸ் (56) மகள் மோனிஷா (26). இவருக்கும், மருதூா்குறிச்சி, இரட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மோனிஷா உயிரிழந்துவிட்டதாக, ஸ்ரீ கிருஷ்ணன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு மாமனாா் மோரிஸிடம் கூறியுள்ளாா்.

மோரிஸ் வந்து பாா்த்தபோது, மோனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தக்கலை போலீஸில் மோரிஸ் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.